சர்ச்சைக்குரிய கையுறைகளுடன் மூவர் கைது

kaithu

புத்த பகவான், இயேசு கிறிஸ்சு மற்றும் அன்னை மரியாள் ஆகியோரின் படங்கள் பொறிக்கப்பட்ட 300 க்கும் மேற்பட்ட கையுறைகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

கண்டி – பூஜாபிட்டிய பகுதியில் வைத்து இவை கைப்பற்றப்பட்டது. இதன்போது சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 311 கையுறைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.