சிறைச்சாலைகளிலிருந்து மேலும் 28 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனால் நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளிலிருந்து அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 4,775 ஆக உயர்வடைந்துள்ளது.
எனினும் தற்சயம் அதிகாரிகள் மற்றும் கைதிகள் உள்ளடங்கலாக 127 பேர் மாத்திரமே கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், ஏனையவர்கள் பூரண குணமடைந்துள்ளனர்.