பெரும்பாலான பகுதிகளில் மட்டுப்படுத்தப்படவுள்ள குடிநீர் விநியோகம்!

Tamil News large 2320182
Tamil News large 2320182

நாட்டில் தற்போதைய நாட்களில் நிலவும் வறண்ட கால நிலையால் பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் குடிநீர் மூலாதாரங்கள் வறண்டுள்ளமை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபை, அறிக்கை ஒன்றின் மூலம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இவ்வாறான நிலை ஏற்படும்போது நுகர்வோரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக, 24 மணிநேரமும் நீர்வழங்கலை தொடர்ந்து மட்டுப்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

இதன் காரணமாக பொதுமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபை கோரியுள்ளது.