ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் விஷேட மத்தியக்குழு கூட்டம் நாளை மதியம் 12 மணிக்கு இடம்பெறவுள்ளது.
கொழும்பில் உள்ள கட்சியின் தலைமையகத்தில், கட்சித் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.
இதன்போது எதிர்கால அரசியல் திட்டம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக கட்சியின் உப தலைவர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.