காவல்துறை அதிகாரிகளுக்காக 2000 முச்சக்கர வண்டிகள் கொள்வனவு

இலங்கை காவல்துறை அதிகாரிகளுக்காக 2000 முச்சக்கர வண்டிகளைக் கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த திட்டத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் சட்டத்தை அமுலாக்குவதற்கும் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கும் பொறுப்பான முக்கிய நிறு வனமான இலங்கை காவல்துறையினரால் தனது கடமைகளைச் சரியான முறையில் செயற்படுவதற்கு போதுமான வாகன வசதிகள் இல்லை என்பதைக் கவனத்திற்குக் கொண்டு இந்த திட்டம் முன்வைக்கப்பட்டது.