யாழில் காணாமல் போன இரு மீனவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு

Death body 720x450 1 1
Death body 720x450 1 1

யாழ்ப்பாணத்தில் உள்ள டெல்ப்ட் தீவில் இருந்து காணாமல் போன இரண்டு மீனவர்களில் ஒருவரின் சடலம் நேற்று மாலை (23) நாகதீப தீவுகளின் கரையில் கண்டெடுக்கப்பட்டதாக யாழ்ப்பாண டெல்ப்ட் காவல் துறையினர் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் டெல்ப்ட் பிரதேசத்தில் வசிக்கும் ஞானசிங்கம் ரமேஷ் (41) மற்றும் ரஞ்சன் மாயன் (19) ஆகியோர் கடந்த 21ஆம் திகதி மீன்பிடிக்கச் சென்றபோது காணாமல் போயுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன யாழ்ப்பாணம் டெல்ஃப்ட் தீவின் ஆறாவது ஒழுங்கையில் வசிக்கும் 19 வயது இளைஞனின் சடலம் கரையொதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன மற்றொரு மீனவரை கடற்படை அதிகாரிகள் மற்றும் அப்பகுதி வாழ் மீனவர்கள் தேடுதல் பணியை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேற்படி காணாமல் போன மீனவர்களின் படகு கவிழ்ந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுவதோடு டெல்ஃப்ட் காவல் துறையினர் மற்றும் யாழ்ப்பாண மீன்வள ஆய்வாளர் அலுவலகம் ஆகியன மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.