கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 447 பேர் குணமடைந்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 76,961 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, தற்போது கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள 4,049 பேர் மாத்திரமே சிகிச்சை பெற்றுவருவதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.