ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் நியமிக்க அக்கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.
இன்று (25) பிற்பகல் இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோல், கட்சியின் பொதுச் செயலாளராக இராஜாங்க அமைச்சர், தயாசிறி ஜயசேகரவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட உப தலைவர் பதவிக்காக நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளனர்.