தங்கொட்டுவ நகர் பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் நேற்றிரவு தீப்பரவல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த தீப்பரவல் சுமார் மூன்று மணித்தியாலங்கள் நீடித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
தீப்பரவல் ஏற்பட்ட வர்த்தக நிலையம் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு அதற்கு அருகிலுள்ள தனியார் வங்கிக்கு தீ பரவியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில் தீப்பரவல் காரணமாக தங்கொட்டுவ நகர் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது