நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 664 பேர் குணமடைந்து, சிகிச்சை மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் நாளாந்த கொரோனா நிலவர அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 77, 625 ஆக உயர்வடைந்துள்ளது.
சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 4,049 ஆக குறைவடைந்துள்ளது.