கொழும்பு,கம்பஹா மாவட்டங்களில் இன்று முதல் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க சுகாதார அமைச்சு தீர்மானம்!

114379358 e6d33e74 1deb 4f40 9686 d38004a4c2d1 1
114379358 e6d33e74 1deb 4f40 9686 d38004a4c2d1 1

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக காணப்படும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் 30 வயது மற்றும் அதனை விட அதிக வயதுடைய பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை இன்று தொடக்கம் பெற்றுக் கொடுக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி, குறித்த மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டிய அதி அவதானம் நிறைந்த கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை இனங்காணுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு மற்றும் கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரிக்கு அறிவித்துள்ளார்.