காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு

Death body 720x450 1 1
Death body 720x450 1 1

பதுளை நாரங்கல மலையில் முகாமிட்டிருந்தபோது, நேற்றிரவு காணாமல்போன 22 வயது இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காவல்துறை மற்றும் இராணுவத்தின் கூட்டு நடவடிக்கையில், மலையின் பள்ளத்தாக்கிலிருந்து இன்று மதியம் குறித்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர், அவிசாவளை – மானியம பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர், நேற்றைய நாளில் 6 நண்பர்களுடன் நாரங்கல மலைக்கு சென்ற நிலையில், இரவு நேரத்தில் அவர்கள் அங்கு முகாமிட்டு தங்கியுள்ளனர்.

இதன்போது, அங்கிருந்து வெளியே சென்ற குறித்த இளைஞன், காணாமல்போயிருந்த நிலையில், இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.