சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.சண்முகராஜா காலமானார்

155495935 10226371192172767 8136929394438837591 n
155495935 10226371192172767 8136929394438837591 n

அன்னாரின் 55 வருடகால ஊடக அனுபவத்தைக் கொண்ட சிரேஷ்ட ஊடகவியலாளரான இவர் தினமணி, சிந்தாமணி, சூடாமணி மற்றும் வீரகேசரி ஆகிய பத்திரிகை நிறுவனங்களில் தொடர்ச்சியாக பணியாற்றியவர் ஆவார்.

கடந்த நாட்களாக உடல் நலக் குறைவினால் பாதிப்படைந்த இவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்று காலை தனது 85 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

கலாபூஷணம் உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற அவர் கலை, இலக்கியம், சினிமா உட்பட பல்வேறு துறைகளிலும் தனது ஆற்றலை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்தவர் ஆவார்.

அவரது மறைவுக்கு ஊடக அமைப்புகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.