கொரோனாவினால் மரணிப்பவர்களின் சரீரங்களை இரணைத்தீவில் அடக்கம் செய்ய அனுமதி

ரம்புக்வெல
ரம்புக்வெல

கொவிட் 19 தொற்றினால் உயிரிழப்பவர்களின் சரீரங்களை கிளிநொச்சி – இரணைத்தீவில் அடக்கம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல, அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்சமயம் இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு இதனை தெரிவித்துள்ளார்.

சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 இதற்காக நியமிக்கப்பட்ட தொழில் நுட்ப குழு, இந்த இடத்தை அடையாளம் கண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். இலங்கையில் கொவிட் நோயால் மரணிப்போரின் சரீரங்களை அடக்கம் செய்வதற்கு அண்மையில் அனுமதிக்கப்பட்டது.