தியத்தலாவை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 6 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
கடந்த 27 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவர்களுக்கு இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் ரோய் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
அதேநேரம், பண்டாரவளையில் உள்ள தனியார் பாடசாலையின் மாணவர் ஒருவருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.