2021ஆம் ஆண்டிற்கான வவுனியா பிரதேச செயலகத்தின் முதலாவது அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று (02) பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் கு.திலீபனின் தலைமையில் பிரதேச செயலாளரின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற கூட்டத்தில் பிரதேசத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், நகரசபை தலைவர் இ.கௌதமன், பிரதேசசபை தலைவர் து.நடராஜசிங்கம், உதவி பிரதேச செயலாளர் சு.பிரியதர்சினி, இராணுவ அதிகாரிகள், பொலிஸார், அரச திணைக்கள அதிகாரிகள், கிராம அபிவிருத்தி சங்கத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.