டேம் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் படல்கும்புர ஐந்தாம் கட்டை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் 52 வயதுடைய புத்தளம் காவல்நிலையத்தில் கடமையாற்றிய உப காவல்துறை பரிசோதகர் என விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
அத்துடன் குறித்த நபர் விஷம் பருகி உயிரிழந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.