இராணுவத்தின் துப்பாக்கி சூட்டில் இருவர் வைத்தியசாலையில் அனுமதி

20210303 074433
20210303 074433

வவுனியா ஓமந்தை பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி இரண்டுபேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை 4 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

ஓமந்தை சேமமடு காட்டுப்பகுதியில் இருந்து சட்டவிரோத மரங்களை கடத்திசென்ற கப்ரக வாகனத்தை வீதியில் கடமையில் நின்றிருந்த இராணுவத்தினர் மறித்துள்ளனர்.

எனினும் வாகனம் நிற்காமல் சென்றமையால் துரத்தி சென்ற போது பரநாட்டண்கல் பகுதியில் வாகனத்தை விட்டு தப்பிசெல்ல முயன்ற போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக இராணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் சேமமடு பகுதியை சேர்ந்த பிரசாத் (வயது – 39) ,சயீவன், (வயது 29) ஆகியோரே காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட வாகனத்துடன் மரம் ஓமந்தை காவல்துறையினர் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்