சட்டக் கல்லூரி மாணவன் மீது தாக்குதல் நடத்திய அனைத்து பேலியகொட காவல் நிலைய அதிகாரிகளையும் கைதுசெய்யுமாறு சட்டமா அதிபர் தப்புல டிலிவேர காவல்த்துறைமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் கைதான நபர்களை தண்டனைச் சட்டம் மற்றும் சித்தரவாதை சட்டத்தின் கீழ் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் சட்டமா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளரும், சட்டத்தரணியுமான நிஷார ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் தொடர்பாக ஒரு தலைமை காவல் ஆய்வாளர் மற்றும் பேலியகொட காவல் நிலையத்துடன் இணைக்கப்பட்ட மூன்று கான்ஸ்டபிள்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பேலியகொட காவல் நிலையத்தில் சந்தேக நபரொருவரை பார்ப்பதற்காக சென்றிருந்த சட்டக்கல்லூரி மாணவன் ஒருவன் மீதே தாக்குதல் சம்பவம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.