ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் கூட்டணியமைத்திருந்தாலும் அவர்களின் செயற்பாடு குறித்து எந்நிலையிலும் அவதானத்துடன் உள்ளதாக சமுர்த்தி, நுண்கடன் மற்றும் தொழிலபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஒரு பங்காளி கட்சியாக காணப்படுகிறது. கூட்டணியமைத்திருந்தாலும் சுதந்திர கட்சியினரது செயற்பாடுகள் குறித்து எந்நிலையிலும் அவதானிப்புடன் இருப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.