இலங்கை விமானப்படையின் 70 ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடத்தப்படுகின்ற விமான சாகசக் காட்சிகள் மற்றும் பலவிதமான விமானக் காட்சிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.
இந்நிகழ்வுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் மாலை 5 மணி தொடக்கம் 6 மணி வரை காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ளன.
இதற்காக இலங்கை விமானப்படையின் 24 விமானங்களும், இந்திய விமானப்படை மற்றும் கடற்படையின் 23 விமானங்களும் கலந்து கொள்ளவுள்ளதாக விமானப்படையின் ஊடகப்பேச்சாளர் குரூப் கப்பித்தான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.