பொலித்தீனால் கட்டப்படும் மாலைகளை தவிர்க்குமாறு கோரிக்கை

download 1 6
download 1 6

புனித தளங்களுக்கு அருகாமையில் பொலித்தீனால் கட்டப்படும் மாலைகளை விற்பனை செய்வதை தவிர்க்குமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை வர்த்தகர்களை கோரியுள்ளது.

கதிர்காமம் புனித தளத்திற்கு அருகாமையில் மேற்கொள்ளப்ப்ட ஆய்வுகளுக்கமைய இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கதிர்காமம் கந்தன் ஆலயத்திற்கு அருகாமையில் பல வர்த்தகர்கள் பொலித்தீன்களால் ஆன மாலைகளை தயாரித்து தங்களது வாழ்கையை நடாத்திச் செல்கின்றனர்.

இந்தநிலையில் குறித்த வர்த்தகர்களுக்கு கடதாசிகளால் ஆன மாலைகளை உற்பத்தி செய்வது தொடர்பான பயிற்சிகளை தேசிய சிற்பகலை சபை வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.