வவுனியா மாவட்டத்தில் இதுவரை 90 ஆயிரம் கிலோ விதை உழுந்து கொள்வனவு!

Vavuniya Railway station 1509073231
Vavuniya Railway station 1509073231

வவுனியா மாவட்டத்தில் இதுவரை 90 ஆயிரம் கிலோ விதை உழுந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக விவசாயத்திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றது.

விதைதேவைக்காக சுத்திகரிக்கப்பட்ட ஒரு கிலோ உழுந்து 890 ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்படும் என வவுனியா விவசாயதிணைக்களம் அறிவித்திருந்தது.

அந்தவகையில் திணைக்களத்தில் விதை உற்பத்தி திட்டத்திற்கும் சாதாரண தேவைக்குமாக விதை உழுந்தினை கொள்வனவு செய்த விவசாயிகளிடம் இருந்து குறித்த உழுந்து மீண்டும் கொள்வனவு செய்யப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில் கொள்வனவு செய்யப்படும் உழுந்து தரம்பிரிக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட ஒரு கிலோ உழுந்து 830ரூபாய் தொடக்கம் 890ரூபாய் வரை கொள்வனவு செய்யப்பட்டு வருகின்றது.

இதுவரை 90 ஆயிரம் கிலோ உழுந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன், அது சேமிக்கப்பட்டு விதை தேவைக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிற்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.