வவுனியாவில் நீண்டகாலமாக இழுபறியில் இருந்த இலங்கை போக்குவரத்து சபை, தனியார் போக்குவரத்து சபைக்கிடையிலான பிரச்சனைக்கு இன்று தீர்வு எட்டப்பட்டுள்ளது.
இதன்படி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இணைந்த நேர அட்டவணையின்படி படி சேவையில் ஈடுபட இரண்டு தரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளன.
வவுனியா போக்குவரத்து பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்கில் இன்று (Dec.9) வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று விசேட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த இரு தினங்களிற்கு முன்பு வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் வவுனியா பேருந்து நிலையம் தொடர்பிலான பிரச்சினைகளை சுமுகமாக தீர்ப்பதற்கு கலந்துரையாடலை ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.