பலாலி விமான நிலைய அபிவிருத்திப்பணிகள் துரித கதியில்!

702b7764 1a4b 472b 8ef4 5dcbeaaf67ac
702b7764 1a4b 472b 8ef4 5dcbeaaf67ac

பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகளை சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான 80 பேர் கொண்ட குழுவினர் இன்று நேரில் வந்து ஆராய்ந்தனர்.

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் விமான போக்குவரத்து ஆரம்ப சேவைகள் அடுத்த மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதற்காக அபிவிருத்திப்பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றன. விமான நிலைய அபிவிருத்தியின் போது ஓடுபாதைகள் சீரமைப்பு செய்யப்படுவதுடன் பயணிகள் விமான நிலையத்துக்குள் வருவதற்கு காங்கேசன்துறை பக்கமாக உள்ள வீதி பயன்படுத்தப்படவுள்ளது.

இந்த அபிவிருத்திப் பணிகளை பார்வையிட கொழும்பில் இருந்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகள், சுங்கத் திணைக்கள அதிகாரிகள், பொறியியலாளர்கள், தெல்லிப்பளை பிரதேச செயலர் சிவசிறி ஆகியோர் கலந்து கொண்டனர்.