சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ‘திரியபியச’ விசேட வீடமைப்பு திட்டத்தின் கீழ் பூர்த்தி செய்யப்பட்டவீடுகள் கையளிக்கும் நிகழ்வு வவுனியா மாமடு மற்றும் அலகல்ல பிரதேசங்களில் இன்று (12) இடம்பெற்றது.
சமுர்த்தி திணைக்களத்தின் குறித்த வீடமைப்பு திட்டத்தின் கீழ் இரண்டு இலட்சம் ரூபாய் செலவில்
வவுனியாவில் 28 வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றது. அவற்றில் பூர்த்தி செய்யப்பட்ட இரண்டு வீடுகள் இன்றைய தினம் கையளிக்கப்பட்டது.
நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன், மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன, வவுனியா மாவட்ட சமுர்த்தி பயணிப்பாளர் திருமதி ச.பத்மரஞ்சன், தெற்கு பிரதேச செயலாளர் காஞ்சன குமார மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.