வவுனியா மாமடு சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியின் செயற்பாடுகளை கணனி வலையமைப்பின் கீழ் வகைப்படுத்தும் நிகழ்வு இன்று (12) இடம்பெற்றது.
வவுனியா சமுர்த்தி பணிப்பாளர் திருமதி எஸ். பத்மரஞ்சன் தலைமையின் கீழ் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புகுழுவின் இணைத்தலைவருமான கு. திலீபனால் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
எதிர்வரும் காலங்களில் மாமடு சமுர்த்தி வங்கியின் சேவைகள் அனைத்தும் கணனி மயப்படுத்தப்பட்டதாக பிரதேச மக்களுக்கு வழங்கவுள்ளது.கணனி மயப்படுத்தப்பட்ட இவ் வங்கி இன்றைய தினம் காலை 10 மணியிலிருந்து தனது சேவையை ஆரம்பித்துள்ளது.
இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட செயலாளர் சமன்பந்துலசேன, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலாளர் காஞ்சன குமார, முன்னாள் பிரதி அமைச்சர் சுமதிபால, உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.