நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை கூடிய மழை பொழிய கூடும் !

Rainning
Rainning

நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கிழக்கு,ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளிலும் ஹம்பாந்தோட்டை,மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களின் சில பாகங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.