சுழற்சி முறையிலான போராட்டத்திற்கு அம்பாறை இளைஞர்கள் ஆதரவு

1615731542 2399159 hirunews
1615731542 2399159 hirunews

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கு உரிய நீதி கோரி நல்லூரில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு அம்பாறை மாவட்ட இளைஞர்கள் சிலரும் கலந்துகொண்டு தமது ஆதரவினை வழங்கியுள்ளனர்.

யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் நல்லூர் – நல்லை ஆதீனம் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த போராட்டம் இன்று 15 நாளாகவும் இடம்பெற்று வருகிறது.

குறித்த போராட்டத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் பிரதிநிதிகள், சிவில் அமைப்பினர், மத தலைவர்கள் என பலரும் தமது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் அம்பாறை மாவட்ட இளைஞர்கள் சிலரும் இன்று கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.