நேற்றைய தினம் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் அதிகமானோர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்!

pcrtest 1024x576 1
pcrtest 1024x576 1

இலங்கையில் நேற்றைய (17) தினம் அடையாளம் காணப்பட்ட 338 கொரோனா தொற்றாளர்களில் அதிகமானோர் (41) கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி மாத்தறை மாவட்டத்தில் 40 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 35 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 32 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 30 பேரும், காலி மாவட்டத்தில் 26 பேர் மற்றும் பதுளை மாவட்டத்திலிருந்து 24 பேரும் நேற்றையதினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து 19 பேரும், களுத்துறை மாவட்டத்திலிருந்து 16 பேரும், கண்டி மாவட்டத்திலிருந்து 10 பேரும், குருநாகல் மாவட்டத்திலிருந்து 8 பேர் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து 7 பேரும் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களுள் அடங்குவர்.

அத்துடன், மன்னார் மாவட்டத்தில் 6 பேரும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலிருந்து தலா 5 பேர் வீதமும், அனுராதபுரம், அம்பாந்தோட்டை, மொனராகலை மாவட்டங்களிலிருந்து தலா 4 பேர் வீதம் மற்றும் அம்பாறை, வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலிருந்து தலா 2 தொற்றாளர்கள் வீதமும் நேற்றைய தினம் இலங்கையில் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஏனைய 16 பேரும் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்களாவர்.