சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

Rainning
Rainning

நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய,சப்ரகமுவ,மத்திய,வடமேல் மற்றும் மேல் மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.