யாழ் மாவட்டச் செயலாளர் தலைமையில் அவசர கலந்துரையாடல்!

IMG 8732
IMG 8732

யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகரித்துள்ள கொரோனா நோய்த்தொற்று நிலமை தொடர்பில் மாவட்டச் செயலாளர், க.மகேசன் தலைமையில் அவசர கலந்துரையாடல் இடம்பெறுகிறது.

மாவட்ட செயலகத்தில் இன்று மாலை ஆரம்பமான கூட்டம் மாலை 6.45 மணிவரை தொடர்கிறது.

கூட்டத்தின் நிறைவில் ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்படும் என்று யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர், க.மகேசன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாநகர பகுதியை முடக்கும் கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதும் சுகாதார அமைச்சின் அனுமதி கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.