நாட்டின் பல பகுதிகளிலும் இன்று மழை பெய்யக்கூடும்!

Rainning
Rainning

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய,சப்ரகமுவ,தெற்கு,மத்திய மற்றும் மேல் மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் அளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல், கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.