வடக்கு மாகாணத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா!

coronavirus disease covid 19 infection medical with typography copy space new official name coronavirus disease named covid 19 pandemic risk background vector illustration 4974 111
coronavirus disease covid 19 infection medical with typography copy space new official name coronavirus disease named covid 19 pandemic risk background vector illustration 4974 111

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் 9 பேருக்கும் வவுனியாவில் 3 பேருக்கும் என மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 370 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 12 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் உத்தியோகத்தர் ஒருவருக்கும், தாதிய மாணவர் ஒருவருக்கும் தோற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட 4 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை மற்றும் ஊர்காவற்றுறை வைத்தியசாலைகளின் தனிமைப்படுத்தல் விடுதிகளில் நோய் அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலையில் பணியாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் மூவருக்கு கொரோனா நோய்த் தொற்று உள்ளமை இன்றைய பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.