இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ஷ அவர்களால், இலங்கை இளைஞர்களின் பலத்தை உலகிற்கு வெளிப்படுத்தல் மற்றும் அவர்களின் சேவையினை உலகறியச் செய்யும் நோக்கிலும், ஒவ்வொரு மாதமும் இறுதி சனிக்கிழமை தினத்தில் தன்னார்வலர்கள் தினம் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
அந்த வகையில்,கடந்த சனிக்கிழமை ( 27 ) முதலாவது தன்னார்வலர்கள் தினத்தை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள இளைஞர்களினால் மாவட்ட ரீதியாக தொண்டர் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
அதே போல், யாழ்ப்பாண மாவட்டத்தின் கரவெட்டி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட , உடுப்பிட்டி சிவகுமரன் இளைஞர் கழகத்தினால் தன்னார்வலர்கள் தினத்தை முன்னிட்டு, நாவலடி வீதியில் சிரமதான செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது.