ராஜபக்ஷக்களுக்கு ஜால்ரா அடித்து இனத்திற்கு துரோகம் செய்தவர் பிள்ளையான்

FB IMG 1617031037707
FB IMG 1617031037707

நாடாளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) தாங்கள் நாடாளுமன்றம் சென்று விட்டால் எதை வேண்டுமானாலும் பேச முடியும் என்று நினைத்து விடாதீர்கள் என ஐக்கிய தேசிய கட்சியின் வாகரை பிரதேச சபை உறுப்பினர் எம்.எச்.றஹீம் முஹம்மட் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தனின் உரைக்கு தனது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் இன்று வெளியிட்ட அறிக்கையில் மேற்சொன்னவாறு தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்-

முதலில் நீங்கள் யார் என்பதை தெரிந்து கொண்டு முஸ்லிம்களுக்கெதிராக குரல்கொடுப்பதைப் பற்றி சிந்தியுங்கள்.

கடந்த மூன்று தசாப்த காலமாக விடுதலைப் போராட்டம் எனக்கூறி அப்பாவி தமிழ் மக்களை ஏமாற்றி இளைஞர்களின் உயிர்களைக்காவு கொண்டு இறுதியில் ராஜபக்ஷக்களுக்கு ஜால்ரா அடித்து உங்களது தலைவனைக் காட்டிக் கொடுத்து உங்கள் இனத்துக்கே துரோகம் செய்தது உங்களைப் போன்றவர்கள்தான்.

இந்நாட்டில் கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்லாது அனைத்து பிரதேசங்களிலும் முஸ்லிம்களின் உயிரையும் உடமையும் பறித்து அநாதைகளாக்கியதும் உங்களைப் போன்றவர்கள்தான்.

இந்த நாட்டில் யுத்தம் என்ற ஒன்றை ஆரம்பித்து பல மிலேச்சத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டதும் உங்களைப் போன்றவர்கள் தான். எனவே எமது மார்க்கத்தையும் முஸ்லிம் சமூகத்தையும் விமர்சிக்க முன் சற்று சிந்தியுங்கள் என அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.