நுண்கடன் பிரச்சினைக்கு தீர்வு கோரி முழங்காவிலில் போராட்டம்

Protest 11
Protest 11

நுண்கடனால் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளிற்கு தீர்வு கோரி இன்று கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது குறித்த போராட்டம் இன்று காலை 10.30 மணியளவில் முழங்காவில் பகுதியில் இடம்பெற்றது.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கவன ஈர்ப்பு போராட்டம் முழங்காவில் சந்தியில் ஆரம்பிக்கப்பட்டு முழங்காவில் தேசிய பாடசாலைவரை சென்று அங்கு கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது நுண்கடன் வழங்கிய நிதி நிறுவனங்களால் அறவிடப்படும் அறவீட்டு முறைகளால் பெண்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.