நாட்டில் சில பகுதிகளில் இன்று 18 மணி நேரம் நீர் வெட்டு

720x380 1 720x380 1
720x380 1 720x380 1

கம்பஹா மாவட்டத்தில் பல பகுதிகளில் இன்றைய தினம் 18 மணி நேரம் நீர் வெட்டு அமல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அதன் படி இன்று இரவு 10 மணி முதல் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி மாலை 4 மணிவரை 18 மணிநேரம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் தெரியவந்துள்ளது.

அதன்படி, வனவாசல, ஒலியமுல்ல , வத்தளை- நீர் கொழும்பு வீதி, எவரிவத்த வீதி, தெலுங்குபாத்த, மீகஸ்வத்த, பள்ளியா வத்த, ஹேகித்த, வெலியமுன வீதி, பளகல்ல, கலஹாதுவ, மருதானை வீதி, ஹெந்தல வீதியின் ஒரு பகுதி, எலகந்த வீதியின் ஒருபகுதி, எலகந்த ஆகிய பகுதி களில் 18 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.