வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் தேவாலயத்தில் பெரிய வெள்ளி விசேட ஆராதனைகள் இடம்பெற்றன.
இன்று(2) மாலை நான்கு மணியளவில் தேவாலய பங்குத்தந்தை தலைமையில் பெரிய வெள்ளி விசேட ஆராதனை இடம்பெற்றுள்ளது. இவ் பெரிய வெள்ளி விசேட ஆராதனையில் வவுனியா நகர்பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிறிஸ்த்தவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது தேவாலயத்தில் இராணுவத்தினரும், காவல்துறையினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.