குளத்தில் நீராடச் சென்று நீரில் மூழ்கி காணாமல் போன சிறுவனின் சடலம் மீட்பு!

Young man who went swimming drowns T24
Young man who went swimming drowns T24

குளத்தில் நீராடச் சென்று நீரில் மூழ்கி காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இராகலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இராகலை, சூரியகந்தை தோட்டத்தை சேர்ந்த தரம் 10 இல் கல்வி பயிலும் 15 வயதுடைய சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவித்த இராகலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.