சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட 4 பேர் கைது

kaithu 1

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்திலுள்ள ஆற்றில் சட்டவிரோதமாக ஆற்று மண்ணை அகழ்ந்து உழவு இயந்திரத்தில் ஏற்றிய 4 பேரை இன்று சனிக்கிழமை (03) அதிகாலை கைது செய்துள்ளதுடன் இரு உழவு இயந்திரங்களை கைப்பற்றியுள்ளதாக வவுணதீவு காவல்துறையினர் தெரிவித்தனர்

காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை வவுணதீவு காவல்துறை பிரிவிலுள்ள கையிலிமடு ஆறு, குருந்தையடி முன்மாரி ஆறு ஆகிய ஆறுகளில் மண்ணை அகழ்ந்து உழவு இயந்திரத்தில் ஏற்றிய போது காவல்துறையினர் சுற்றிவளைத்து 4 பேரை கைது செய்ததுடன் உழவு இயந்திரங்களை மீட்டுள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதூக காவல்துறையினர் தெரிவித்தனர்.