கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் பலி

1599191154 death corona 2
1599191154 death corona 2

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 575 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இங்கிரிய பிரதேசத்தை சேர்ந்த 86 வயதுடைய பெண் ஒருவரும், ஹோமாகமை பிரதேசத்தை சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவரும், புவக்பிடிய பிரதேசத்தை சேர்ந்த 87 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 90 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.