பிரதேச சபை உறுப்பினரை தாக்கிய மூவர் கைது!

kaithu

யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினரை தாக்கி படுகாயமடைய வைத்தமை தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் சந்தேகநபர்களை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

சாவகச்சேரி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.