காசல்ரீ நீர்தேக்க அதி உச்சப்பாதுகாப்பு வனப்பகுதியில் தீ விபத்து!

1574660036 Fire 2 1
1574660036 Fire 2 1

காசல்ரீ நீர்தேக்க அதி உச்சப்பாதுகாப்பு வனப்பகுதியில் ஏற்பட்ட தீயினால் சுமார் 02 ஏக்கர் காடு எரிந்து நாசமாகியுள்ளது.

நோட்டன் பிரிட்ஜ் காவல்துறை பிரிவிற்குட்பட்ட இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான காசல்ரீ நீர்தேக்கத்திற்கு கீழுள்ள காசல்ரி தொழிற்பயிற்சி நிலைய பகுதியிலுள்ள கருப்பன் தேயிலை மரம் மானாபுல் காட்டுப்பகுதியிலேயே இன்று (04) மதியம் 01 மணியளவில் தீ பற்றியது.

தீ பரவலையடுத்து நோட்டன் பிரிட்ஜ் காவல்துறையினரும் மின்சாரசபை ஊழியர்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போதிலும் அதிகளவான கருப்பன் தேயிலை மரக்கன்றுகள் தீயில் கருகி நாசமாகியுள்ளது.