கொழும்பு துறைமுக நகரில் சேவையாற்றும் சீன பிரஜைகள் 1000 பேருக்கும் சினோபோம் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அதனடிப்படையில் இன்றுடன் கொழும்பு நகரில் உள்ள அனைத்து சீன பிரஜைகளுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று இரண்டாவது நாளாகவும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் நேற்றைய தினம் 1083 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதாகவும் கொழும்பு மாநகரசபையின் நோய் தடுப்பு வைத்திய அதிகாரி தினூகா குருகே தெரிவித்துள்ளார்.
சினோபோம் தடுப்பூசி பெற்றுக் கொண்ட அனைவருக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.