மொறட்டுவ பகுதியில் அமைந்துள்ள விகாரையென்றின் பிக்குவிடமிருந்து 2.5 மில்லியன் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற முயன்ற குற்றச்சாட்டுக்காக இருவரை கொழும்பு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் கோரிய பணத் தொகையிலிருந்து ஆரம்ப கட்டமாக 5 இலட்சம் ரூபாவினை பெற முயன்றபோது நேற்றைய தினம் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் கைதான சந்தேக நபர்களை மொறட்டுவை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.