புத்தாண்டு காலங்களில் சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க வேண்டும் -அஜித் ரோஹண

ajith2
ajith2

தமிழ், சிங்கள புத்தாண்டு காலங்களில் சுகாதார வழிகாட்டுதல்களைக் பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆரோக்கியமான மற்றும் அமைதியான புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக மக்கள் எல்லா நேரங்களிலும் வழிகாட்டுதல்களையும் அனைத்து தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

பொது இடங்களில் எல்லா நேரங்களிலும் முகமூடி அணியுமாறும் சமூக தூரத்தை பராமரிக்குமாறும் அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

இதேநேரம், பண்டிகை காலங்களில் அதிக எண்ணிக்கையிலான விபத்துக்கள் பதிவாகின்றன என்பதால், வீதி விபத்துக்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு அஜித் ரோஹன கேட்டுக்கொண்டனர்.