காத்தான்குடியில் பினான்ஸ் கம்பனிக் கட்டிடம் தீபற்றியது!

WhatsApp Image 2021 04 07 at 19.32.03
WhatsApp Image 2021 04 07 at 19.32.03

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதான வீதியில் அமைந்துள்ள எல்.பி. பினான்ஸ் கம்பனி கட்டிடம் இன்று புதன்கிழமை (07) இரவு தீப்பற்றி எரிந்ததையடுத்து தீயணைப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

குறித்த பினான்ஸ் கம்பனி வழமைபோல இன்று மாலையில் கடமைகள் முடிவடைந்து பூட்டப்பட்டுள்ள நிலையில் சுமார் 7 மணியளவில் கட்டிடம் தீப்பற்றியது இதனையடுத்து அந்தப்பகுதிகளில் உள்ள கடைகள் மூடப்பட்டு மக்களை வெளியேற்றியதையடுத்து மட்டக்களப்பு மாநகரசபை தீயணைப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்

இதேவேளை அந்த பகுதியில் சுமார் ஒருமணித்தியாலம் வாகன நெரிசல் ஏற்பட்டதுடன் காத்தான்குடி பிரதேசத்திற்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்ததுடன் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது

இதுதொடர்பான விசாரணைகளை காத்தான்குடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.