மீண்டும் கொரோனா பரவல் தீவிரமடையும் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது-சுதத் சமரவீர!

625.500.560.350.160.300.053.800.900.160.90 2021 04 07T224544.852
625.500.560.350.160.300.053.800.900.160.90 2021 04 07T224544.852

நாட்டில் எந்த வேளையிலும் புதிய கொரோனா கொத்தணிகள் உருவாகும் அச்சுறுத்தல் இன்னும் இருப்பதாக, தொற்றுநோயியல் விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களிடம் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

தற்போது நாளாந்தம் பதிவாகின்ற கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.

ஆனாலும் இந்த நோய்த்தொற்று கொத்தணிகள் உருவாகும் அச்சுறுத்தல் அதிகமாகவே உள்ளது.

தற்போது பண்டிகை காலம் ஆரம்பிக்கிறது.
இந்த காலப்பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பாக நடந்து கொள்ளாவிட்டால், மீண்டும் கொரோனா பரவல் தீவிரமடையும் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது என்று அவர் எச்சரித்துள்ளார்.