சில பிரதேசங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்

Rainning
Rainning

இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் வரையில் மழைபெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில பிரதேசங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்.